தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது சரக்கு ரயிலில் சிக்கிய நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்
சரக்கு ரயிலில் சிக்கிய நபர் சாதுர்த்தியமாக தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

அனந்தபூர்: ஆந்திராவில் ஓடும் ரயிலின் அடியில் சிக்கிய நபர், சாதுர்யமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், பயணி ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. ரயிலைக் கண்டு அதிர்ச்சியடையாமல், சாதுர்யமாக யோசித்த அந்நபர், இரு தண்டவாளத்திற்கும் நடுவே படுத்துக் கொண்டார்.

ரயில் அவரைக் கடந்து செல்லும் வரை, சுமார் ஒரு நிமிடங்களுக்கும் மேலாக அசையாமல் அங்கேயே அவர் படுத்திருந்தார். பின்னர் ரயில் சென்றதும் அந்நபர் அங்கிருந்து எழுந்துச் சென்றார்.
பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரயிலுக்கு அடியில் படுத்திருந்த நபருக்கு 45 வயதிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், அவர் யார் என்பது குறித்த அடையாளங்கள் தெரியவில்லை. அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காக பாலத்தைப் பயன்படுத்தாமல் அந்நபர் தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications