சீண்டி தொல்லை கொடுத்த "விராட் டோணி"– புரட்டி எடுத்த மாணவிகள்
செந்த்வா, ம.பி.: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி பொது இடத்தில் வைத்து வாலிபருக்கு மற்ற பெண்களை விட்டு தர்மஅடி கொடுத்த வைத்தார்.
மத்திய பிரதேசம் மாநிலம் செந்த்வா பகுதியை சேர்ந்த வாலிபர் விராட் டோணி.
விராட் டோணி அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மாணவிகளுக்கு இம்சை:
மாணவிகளின் அருகே சென்று தொல்லை கொடுத்தல், விசில் அடித்தல் சாடையாக கூப்பிடுதல் என பல்வேறு இம்சைகளை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இன்ஸ்பெக்டரிடம் புகார்:
இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளான மாணவிகள் எத்தனைமுறை எச்சரித்தும் விராட் டோணி கேட்கவில்லை. பெரும் சிரமத்திற்கு உள்ளான மாணவிகள் அப்பகுதியை சேர்ந்த பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோனிகா சிங்கிடம் எடுத்துக் கூறினர்.
பெண்களால் தர்ம அடி:
பெண் போலீசாரிடம் அவர்கள் புகார் கொடுத்தனர். உடனடியாக டோணியை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி மோனிகா சிங் பொது இடத்தில் அவமானம் அடைய செய்யும் விதமாக பெண்களை வைத்து தர்மஅடி கொடுக்க வைத்தார். புகார் தெரிவித்த பெண்களை வைத்தும் முதுகில் அடிக்க வைத்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு:
இதனால் அவமானமடைந்த வாலிபர் விராட் டோணி மாவட்ட நீதிபதியை அணுகி புகார் கூறி மனு அளித்தார்.
வாலிபருக்கு அவமானம்:
அந்த மனுவில் "பொதுமக்கள் முன்னே வைத்து என்ன தண்டித்தது மிகவும் அவமானமானதாகும். என்னை கோர்ட்டிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். பின்னர் எனக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கவேண்டும்" என்று விராட் டோணி கூறினார்.
அடி தேவைதான் தம்பி:
இதை விசாரித்த நீதிபதி அவருடைய குற்றச்சாட்டை ஏற்க மறுத்துவிட்டார். டோணிக்கு அடிதேவைதான் பொது இடத்தில் வைத்து பள்ளி மாணவிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார். அவர் பொது இடத்தில் வைத்து தண்டிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் சரியானதே என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications