திருமண இணையதளம் மூலம் அறிமுகமானவரை பார்க்கப் போன பெண் பலாத்காரம்
பனாஜி: திருமண இணையதளம் மூலமாக அறிமுகமான நபரைச் சந்திக்கச் சென்றபோது, கோவாவில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சட்டீஸ்கரைச் சேர்ந்தவர். திருமண ஏற்பாட்டு இணையதளம் மூலமாக பெர்னாண்டஸ் என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஒருவரை ஒருவரை ஒருவர் பிடித்துப் போகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தன்னை சந்திக்க கோவா வரும்படி அப்பெண்ணை அழைத்துள்ளார் வெலன்டினோ பெர்னாண்டஸ். அப்பெண் அழைப்பை ஏற்று கோவா சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை பலாத்காரம் செய்த பெர்னாண்டஸ், அவரிடமிருந்த பணம், ஆபரணங்கள் முதலியவற்றை திருடியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோவா போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் பெர்னாண்டஸ் பலாத்காரம் செய்து, தன் உடைமைகளைத் திருடி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக பெர்னாண்டஸும், அவரது தாயாரும் தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.