நடிகர் நாகர்ஜுனாவின் மகன் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு: வாலிபருக்கு தர்ம அடி
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் மகன் அகில் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருந்த வாலிபர் இளம் பெண் மற்றும் அவரது சகோதரர்களால் அடித்து நொறுக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளியைச் சேர்ந்தவர் இவெண்ட் மேனேஜரான 23 வயது ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கும் நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனியின் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருந்த தேவினேனி அபினவ்(24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

அகில் பெயரை பயன்படுத்தி ராணியுடன் ஃபேஸ்புக்கில் பேசி வந்த அபினவ் தனது காதலையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ராணி அகில் பெயரில் யாரோ தன்னுடன் ஃபேஸ்புக்கில் சாட் செய்வதை தெரிந்து கொண்டார். அந்த நபரை கண்டுபிடிக்க அவர் தொடர்ந்து சாட் செய்தார்.
அபினவை கண்டுபிடித்த ராணி தனது சகோதரர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கினார். பின்னர் அவர்கள் அபினவை போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,
அந்த நபர் போலி கணக்கு துவங்கினாரே தவிர அந்த பெண்ணை மோசடி செய்யவில்லை. அந்த பெண் அபினவ் போலி கணக்கு துவங்கியதை கண்டுபிடித்து அவரை நேரில் வருமாறு கூறினார். அபினவ் வந்தபோது அவர் தாக்கப்பட்டார் என்றார்.
அபினவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications