சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பன்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜையை ஒட்டி தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜைகள் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.
நடைதிறந்த முதல் நாளில் இருந்தே ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்ததால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.

வழக்கமாக மண்டல பூஜை காலங்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த ஆண்டு அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதுபோல இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இம்முறை இரவு 11.45 மணிக்கு தான் நடை அடைக்கப்பட்டது. எனினும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
மண்டல பூஜை தொடங்கி ஒரு மண்டலம்(41 நாட்கள்) இன்றுடன் முடிவடைவதால் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கிகள் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது. தங்க அங்கி ஊர்வலத்திற்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது.
கண்டரரு மகேஷ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தங்க அங்கிகளை பெற்றுக் கொண்டு கோவில் கருவறைக்குள் கொண்டு சென்றனர். பின்னர் தங்கஅங்கிகள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்றும் ஐய்யப்பனுக்கு தங்கஅங்கி சாத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.
அப்போது, சன்னிதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தங்கஅங்கியில் ஜொலித்த சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு அத்தாழ பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து இவ்வருட மண்டல பூஜைகள் முடிவடைகிறது.
மகரவிளக்கு பூஜை
வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மகர விளக்கு பூஜை திருவிழாவுக்காக வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி சிறப்பு வாய்ந்த மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications