மணிபூர் தாக்குதலுக்கு மூளையான தீவிரவாதிகளின் தலைவர் கப்லாங் எங்கே?
இம்பால்: மணிபூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதிகளின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கை கைது செய்வது மிகவும் முக்கியமானது.
மணிபூரில் 18 ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகளில் சிலரை இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் வைத்து அழித்தது. மணிபூர் கொலை குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கை கைது செய்வது மிகவும் முக்கியம்.
மணிபூர் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றி தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. அண்மை காலத்தில் சக்திவாய்ந்த தலைவராக உருவாகியுள்ள கப்லாங் குறித்தும் தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது.

கப்லாங் எங்கே?
என்.எஸ்.சி.என்-கே என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளவர் கப்லாங். மணிபூர் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அந்த அமைப்பின் தலைவர் கப்லாங்கிற்கு மியான்மரின் தாகாவில் ஒரு வீடும், சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒரு வீடும் உள்ளது. யுனான் மாகாணத்தில் பலமுறை காணப்பட்ட உல்பா தீவிரவாதி பிரகாஷ் பருவாவுடன் கப்லாங்கிற்கு தொடர்பு உள்ளது.

சீனா
மணிபூர் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழிக்கும் என்று எதிர்பார்த்த கப்லாங் தாகாவில் இருந்து வெளியேறி யுனான் மாகாணத்திற்கு தப்பியோடியிருக்க வேண்டும் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது ஆட்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

சக்திவாய்ந்தவர்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளிடையே கப்லாங் தான் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர். அவர் உல்பா, கேஎல்ஓ உள்பட பிற வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளை யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஆப் வெஸ்டர்ன் சவுத் இந்தியா என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து அதற்கு தலைவர் ஆனார்.

விசாரணை
மணிபூர் தாக்குதல் நடந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு மாதிரிகள் உள்ளிட்டவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.சி.என்.-கே அமைப்பு இந்த தாக்குதலை நடத்த ஒரு மாதத்திற்கும் மேல் திட்டமிட்டு ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications