கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்- குக்கி இன பெண் அமைச்சர் வீடு தீக்கிரை- புதிய மோதலில் 11 பேர் பலி!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மணிப்பூர் மாநில பெண் அமைச்சர் ஒருவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புதிய தாக்குதல் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை.

மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியால் இந்த இனமோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இம்மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், 500க்கும் அதிகமான பி.எஸ்.எப்.வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவதால் நிலைமை மிக மிக மோசமடைந்துள்ளது. மைத்தேயி, குக்கி ஆகிய இரு இனக்குழுக்களும் ஆயுதங்கள் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு இம்பால் உள்ளிட்ட சில பகுதிகளில் இரு குழுக்களிடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இம்மோதல்களில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதலில் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20க்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மணிப்பூர் பெண் அமைச்சர் Nemcha Kipgen என்பவரது வீடும் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குக்கி இனக் குழுவினரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் ஏற்கனவே பல ஆளும் பாஜக அமைச்சர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர் மணிப்பூர் மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சர்.
Video footage of Kuki-Zo MLA Nemcha Kipgen burnt down by Meitei Mobs in Lamphel, Imphal today. pic.twitter.com/wwGBdUxAKl
— ITLF Media Cell (@ITLFMediaCell) June 14, 2023
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்படாத நிலையில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வி. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நிலைமையை ஆராய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அம்மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவைகள் இன்று வரை ஜூன் 15 வரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மணிப்பூர் வன்முறை தொடர்பான பல தகவல்கள் வெளியாகவும் இருக்கின்றன என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications