இவங்க ரிமோட் கண்ட்ரோல் அரசு பற்றி பேசுறாங்க...: பாஜக- ஆர்.எஸ்.எஸ். குறித்து மணீஷ் திவாரி!
டெல்லி: மத்திய அரசை ரிமோட் கண்ட்ரோல் அரசு என்று விமர்சிக்கும் பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது என்பதை மோடி விவகாரம் வெளிப்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி சாடியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியையே முன்னிறுத்த வேண்டும் என்பது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கருத்து. ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்த கருத்தை ஏற்று மோடியை பிரதமர் வேட்பாளராக அறிக்க படாதபாடுபட்டு வருகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, நாக்பூரை மையமாக கொண்ட (ஆர்.எஸ்.எஸ்.) ஒரு குழு, பாஜகவின் குரல்வளையை நெருக்கிக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயகம் என்கிறார்கள்.. மத்திய அரசை ரிமோட் கண்ட்ரோல் அரசு என்று விமர்சிப்பவர்களும் இவர்களே என்று கிண்டலடித்திருக்கிறார்.