மோடி குறித்து வாயை விட்ட மணிசங்கர் அய்யரால் தோல்வியைத் தழுவியதா காங்கிரஸ்?

குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீயாக வேலை செய்யது.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் செய்தனர். இதேபோல் பாஜகவும் அதன் கோட்டையான குஜராத்தை நழுவ விட்டவிடக்கூடாது என்று முனைப்பில் பிரச்சாரம் செய்தது.

மணிசங்கர் அய்யரின் விமர்சனம்

மணிசங்கர் அய்யரின் விமர்சனம்

முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான கேப்பில் அனல்பறக்கும் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் முன்னாள் எம்பி மணிசங்கர் அய்யர். அப்போது பிரதமர் மோடி ஒரு இழிப்பிறவி என தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

கட்சியிலிருந்து சஸ்பென்ட்

கட்சியிலிருந்து சஸ்பென்ட்

இது பாஜக தலைவர்கள் மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை தற்காலிகமாக நீக்கிய காங்கிரஸ் மேலிடம் அவரது சர்ச்சைக்குரி பேச்சுக்கு விளக்கம் கேட்டது.

காங்கிரஸின் டிராமா

காங்கிரஸின் டிராமா

ஆனால் இதெல்லாம் குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் அரங்கேற்றும் நாடகம் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி மணிசங்கர் அய்யரின் பேச்சை பெரும் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டார்.

மக்கள் பதில் சொல்வார்கள்

மக்கள் பதில் சொல்வார்கள்

மணிசங்கர் அய்யர் இழிவு படுத்தியது தன்னையா? அல்லது குஜராத் மக்களையா? அல்லது இந்த தேசத்தையா? நமது கலாச்சாரத்தையா என கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள் என்றும் கூறினார்.

மோடி ஹாட் பிரச்சாரம்

மோடி ஹாட் பிரச்சாரம்

மேலும் தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். இதனை காங்கிரஸ் கட்சி மூடி மறைத்ததாகவும் ஹாட்டாக பிரச்சாரம் செய்தார்.

ரிவிட்டான விமர்சனம்

ரிவிட்டான விமர்சனம்

இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கடைசி கட்டத்தில் மோடியின் பிரச்சாரமும், மோடி குறித்த மணிசங்கர் அய்யரின் தரக்குறைவான விமர்சனமுமே அந்த தொகுதிகளில் காங்கிரஸ் பின்தங்கியதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+