அதிர வைக்கும் டேட்டா.. 5 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தாக்குதல்களில் 352 பாதுகாப்பு படையினர் பலி!

Subscribe to Oneindia Tamil

கோராபுட்: மாவோயிஸ்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் 352 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்கிவிட்டோம்; மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து ஆதிபழங்குடிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் இதற்கு பதில் தரும் வகையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

maoists kill 352 security forces in last five years

கடந்த 10 ஆண்டுகளில் 2290 தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இதில் 1788 பொதுமக்களும் 990 பாதுகாப்புப் படையினரும் பலியாகி உள்ளனர்.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் 2016- ஆம் ஆண்டு அதிகபட்சமாக 262 தாக்குதல்களை நடத்தினர். அதில் 122 பொதுமக்களும் 60 பாதுகாப்புப் படையினரும் பலியாகினர்.

2014-ல் 97, 2015-ல் 56, 2016-ல் 60. 2017-ல் 76, 2018-ல் 73 பாதுகாப்புப் படையினரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். நடப்பாண்டில் இன்றைய தாக்குதலுடன் சேர்த்து 30 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாவோயிஸ்டுகள் பலம் குறைந்துவிட்டதாக பத்திரிகைகள் எழுதி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+