பாகுபலி பஞ்சாயத்து.... 90% முட்டாள் இந்தியர்களை 99% முட்டாள்களாக்கும் ஊடகங்கள்... கட்ஜூ காட்டம்!
பாகுபலி திரைப்படம் குறித்து தலைப்பு செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள் 90 சதவீத முட்டாள்களாக உள்ள மக்களை 99 சதவீத முட்டாள்களாக்க விரும்புகின்றன.
டெல்லி: பாகுபலி திரைப்படம் குறித்து தலைப்பு செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள் 90 சதவீத முட்டாள்களாக உள்ள மக்களை 99 சதவீத முட்டாள்களாக்க முற்படுகின்றன என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக சாடியுள்ளார்.
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 என்ற இரண்டாம் பாகம் நேற்று முதல் திரையிடப்பட்டது. இது முதல்நாளே ரூ.125 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெ்ளியாகின. அனைத்து பத்திரிகைகளும், செய்தி நிறுவனங்கள் பாகுபலி 2 குறித்த செய்திகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில், பாகுபலி 2 படத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்ற தகவலை பார்க்கும்போது மக்களுக்கு அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை எனிலும் அவர்களை திசைதிருப்பும் முயற்சிகளை நன்கு செய்கின்றனர்.
அவர்களுக்கு மதம், திரைப்படங்கள், ஜோதிடம், சாமியார்கள், கிரிக்கெட், ஊடகங்கள் ஆகியவற்றை மட்டும் சரக்கஸ் வித்தை போல காட்டி வருகிறீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பாகுபலி குறித்து சில ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக வெளியிடுகின்றன என்று இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று முகநூல் பயன்பாட்டாளர் ஒருவர் கட்ஜுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் பதில் கொடுக்கையில், மக்களில் 90 சதவீதத்தினர் முட்டாள்களாகவே உள்ளனர். அவர்களை 99 சதவீத முட்டாளாக்க ஊடகங்கள் விரும்புகின்றன என்பதை நிரூபிக்கிறது என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications