கலாமுக்கு அஞ்சலி செலுத்துவது நமது கடமையல்லவா.. 96 வயதில் அசத்திய முன்னாள் விமானப்படை தளபதி!
டெல்லி: 96 வயதிலும் வீல் சேரில் வந்து மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி அனைவரையும் நெகிழ வைத்து விட்டார் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் அர்ஜான் சிங்.
குவஹாத்தியிலிருந்து டெல்லிக்கு அப்துல் கலாமின் உடல் கொண்டு வரப்பட்டபோது பாலம் விமானப்படைத் தளத்தில் இந்த உருக்கமான காட்சியை அனைவரும் கண்டு நெகிழ்ந்தனர்.
96 வயதான மார்ஷல் அர்ஜான் சிங் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் வீல் சேரில் வருகை தந்தார். பின்னர் கலாம் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பு எழுந்து நின்ற அவர் இரு வீர்ரகளின் துணையுடன் அருகில் சென்றார். மலர் வளையம் வைத்தார். சல்யூட் வைத்து கலாமுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது அனைவரையும் நெகிழ வைத்தது. உடல் நலிவுற்ற நிலையிலும் கூட கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதை விட வேறு என்ன கடமை உள்ளது என்பதையே காட்டியது அர்ஜான் சிங்கின் செயல்.
சமூக வலைதளங்களிலும் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications