ஹிமாச்சலில் கனமழை.. சரிந்து விழுந்த மேம்பாலம்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக முக்கிய மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கனமழைக் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

சரிந்த மேம்பாலம்
இந்த நிலையில் சோலன் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோலன் பகுதியில் அமைந்துள்ள இந்த மேம்பாலம், கல்கா-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதையை இணைக்கிறது. இதனால் இந்த மேம்பாலம் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது.

உயிரிழப்பு இல்லை
வழக்கமாக அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் இந்த மேம்பாலத்தில், கனமழை காரணமாக பெரியளவில் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் மேம்பாலம் சரிந்த போது, உயிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 பேர் பலி?
அதேபோல் குல்லு மாவட்டத்தில் நேற்று காலை 9 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் காடெல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் புதையுண்டனர். இந்தத் தகவல் அறிந்து பேரிடர் மீட்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். புதையுண்டவர்களின் பெயர்கள் சவேலு தேவி கிரித்திகா என்பது தெரியவந்துள்ளது. இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் உத்தரவு
இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறுகையில், நேற்று இரவு முதல் ஹிமாச்சலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குல்லு மற்றும் மண்டி பகுதிகளில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications