மும்பை: தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
மும்பை: மும்பையின் பரெல் பகுதியில் உள்ள மவுலி சதன் என்ற இடத்திற்கு அருகில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கு அமைந்துள்ள பகுதியில் சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியது. மேலும் அங்கிருந்த ஜெனரேட்டர் மற்றும் செல்போன் கோபுரமும் எரிந்து நாசமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்த தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்களும், 8 தண்ணீர் டேங்கர் லாரிகளும் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் இதுவரை தெரியவில்லை.
Massive fire in Mauli Sadan (Parel,Mumbai), fire tenders at the spot dousing the flames. pic.twitter.com/KsDqAVeSP0
— ANI (@ANI_news) December 29, 2015 











Click it and Unblock the Notifications