அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: ரூ. 2000 வரை மட்டுமே ரொக்கமாக தரலாம்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
டெல்லி: லோக்சபாவில் 2017 -18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். ஒவ்வொரு அறிவிப்புக்கும் பாஜக உறுப்பினர்கள் டேபிளை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் எம்.பிக்கள் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
கிராம புற வளர்ச்சி, ஊரக வேலை வாய்ப்பு திட்டம், மகளிர் மேம்பாடு, விவசாய கடன் பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜெட்லி. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜெட்லி.

கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பட்டியலிட்டார் அருண் ஜெட்லி. அதுவரை உற்சாகமாக பட்ஜெட் உரையை கேட்டுக்கொண்டிருந்த பாஜக எம்.பிக்களின் மத்தியிலும் கூட லேசாக சலசலப்பு எழுந்தது. அது அரசியல் கட்சிகளுக்கு அருண் ஜெட்லி வைத்த செக்தான்.
அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும் என்றும், அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்தார். இதற்கு தகுந்தார் போல ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாக கூறினார். அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் என்றார்.
பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரொக்க பண பரிமாற்றத்தை தடுத்து டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒருவர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும்போது ரொக்கமாக ரூ. 2000 மட்டுமே தர முடியும். அதற்கு மேல் போனால் செக் அல்லது டிஜிட்டல் முறை மூலமாக மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்கு இதற்கு முன்பு வரை ரூ. 20,000 வரை ரொக்கமாக தர முடியும் என்ற நிலை இருந்தது இதனை தற்போது 2000 ருபாயாக ஆக குறைத்துள்ளனர். அரசியல் கட்சிகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய ஜெட்லி எல்லாம் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications