மோடியை ஜெயா, மமதா, முலாயம் ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மட்டேன்: மாயாவதி திட்டவட்டம்
லக்னோ: மத்தியில் பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ்கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, டைம்ஸ் நவ் டிவிக்கு நேற்று அளித்த பேட்டியில், தேர்தல் பிரசாரம் வேறு.. அரசியல் என்பது வேறு.. நாங்கள் பெரும்பான்மை பெற்றாலும் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோருவோம் என்று தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பட்டும் படாமலும் பதிலளித்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்ட போதும் ஒன்றுக்குக் கூட நேரடியாக மோடி பதிலளிக்கவில்லை. இதனால் தேர்தலுக்குப் பின் பாஜக அணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என்ற கருத்து உருவானது.
இந்நிலையில் லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா, மமதா மற்றும் என்னுடைய ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
நரேந்திர மோடி நேற்று அளித்த பேட்டியிலும் இதை வெளிப்படுத்தியிருக்கிறார். தேர்தலுக்குப் பின்னர் பகுஜன் சமாஜூடன் கூட்டணிக்கு வாய்ப்பிருப்பது போல பேசினால் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக வாக்குகளை பெற்றுவிடலாம் என மோடி நினைக்கிறார். அது ஒருபோதும் நடைபெறாது.
நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் ஆகியோர் ஆதரித்தாலும் நான் ஆதரிக்கமட்டேன். மத்தியில் பாஜகவோ அல்லது நரேந்திர மோடியோ ஆட்சி அமைக்க ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் எங்கள் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications