மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
2017-ல் நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம், மராத்தி, தெலுங்கு மொழிகளில் நடக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம், மராத்தி, தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும். இந்த நீட் தேர்வினால் மாநிலங்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வு இது வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால், பல மாநிலங்களில் அவர்களின் தாய் மொழிகளில் படித்த திறமையான மாணவர்களுக்கு கூட மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழிலும் தேர்வு எழதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கிரமாப் புற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications