மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் நிச்சயம் புது அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அணை கட்டுவதை கண்டித்து கடந்த 28ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இது தவிர மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சூழலில் அணை கட்ட ஆதரவு அளிக்குமாறு கூறி கர்நாடக எம்.பி.க்கள் மோடியை சந்திக்கவிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது கூறுகையில்,
மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும். அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் உரிமையை முன்னெடுக்க அனைவரும் போராட தயாராக வேண்டும்.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 4 பேர், அனைத்து கட்சி எம்.பி.க்கள் டெல்லி சென்று பிரதமரிடம் மனு அளிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications