மேகாலயா யாருக்கு? 59 தொகுதிகளுக்கு அமைதியாக முடிந்தது ஓட்டுப்பதிவு! பாஜக, காங், மம்தா கட்சி போட்டி
மேகாலயாவில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நடக்கும் நிலையில் குறுக்கே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் புகுந்து தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. தற்போது கூட்டணியை விட்டு விலகி பாஜக தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இன்று 59 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறுக்கே புகுந்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால் இந்த பிரபலமான கட்சிகளுடன் தற்போது அங்கு முதல்வராக உள்ள என்பிபி கட்சியும் மல்லுக்கட்டி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு 59 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கு கடந்த மாதம் சட்சபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
நாகலாந்து, மேகாலயாவில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேகாலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கட்சிகள் எனும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மேகாலயாவில் 60 தொகுதிகள்
மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இந்த கூட்டணிக்கு 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிகபட்சமாக என்பிபி கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

59 தொகுதிகளுக்கு தேர்தல்
இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் மம்தா பானர்ஜியின் வியூகம் வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த முகுல் சங்மா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இங்கு தற்போது அனைத்து கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் சட்டசபை தொகுதி வேட்பாளரான யுடிபி கட்சியின் வேட்பாளர் எச்டிஆர் லைங்தோ காலமானர். இதனால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாறாக 59 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

முட்டிமோதும் கட்சிகள்
இதில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் 59 தொகுதிகளில் களமிறங்கி உள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் போட்டியிட்டுள்ளது. என்பிபி கட்சி 57 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதுதவிர பிற கட்சிகள், சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர். மொத்தம் 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 36 பேர் பெண்கள் ஆவார்கள். இங்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.

துவங்கிய ஓட்டுப்பதிவு
தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 75 ஆயிரத்து 236 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10.99 லட்சம் பேர் பெண்களாகவும், 10.68 லட்சம் பேர் ஆண்களாகவும் உள்ளனர். முதல் தலைமுறை ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரமாக உள்ளது. இந்நிலையில் தான் மேகாலயாவில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 3,419 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

பாதுகாப்புகள் தீவிரம்
மாநிலத்தில் அமைதியாக தேர்தலை நடத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 323 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றம் நிறைந்தவை எனவும் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் திரிபுரா, நாகலாந்தைபோல் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications