மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு: பாஜகவை விட்டு தப்பி ஓடும் மேகாலயா பாஜக தலைவர்கள்
மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா தலைவர்கள் பாஜகவை விட்டு தப்பி ஓடுகின்றனர்.
ஷில்லாங்: மத்திய அரசின் மாட்டிறைச்சி தடையை கண்டித்து மேகாலயாவில் பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவை விட்டு தப்பி ஓடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மாட்டிறைச்சியும் முக்கிய உணவுப் பொருள். ஆனால் மத்திய பாஜக அரசோ, மாட்டிறைச்சிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வடகிழக்கு மற்றும் தென்மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் பாஜகவே ஆட்சிக்கு வந்தாலும் மாட்டிறைச்சி தடையை அமல்படுத்த முடியாது என அறிவிக்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
இந்நிலையில் மேகாலயா மாநில பாஜக மூத்த தலைவர் பெர்னார்ட் மாரக் சில நாட்களுக்கு முன்னர் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைவிட்டு விலகினார். தற்போது மற்றொரு பாஜக தலைவான பச்சு மாரக்கும் பாஜகவைவிட்டு விலகியுள்ளார்.
இவர்தான் அண்மையில் மத்திய அரசு 3 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி ரைஸ் பீர் வித் மாட்டிறைச்சி நிகழ்ச்சியை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications