குடிக்க தண்ணீர் இல்லை.. குடும்பத்தோடு பெங்களூர், மும்பைக்கு இடம் பெயரும் வட கர்நாடக மக்கள்!
பெங்களூர்: கடுமையான வெயில், அதன் காரணமாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், வட கர்நாடக மாவட்ட மக்கள் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று, கட்டிட வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
நிலம், வீடு எல்லாம் இருந்தும்கூட, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், வெயிலில் இருந்து தப்பிக்கவும் இவ்வாறு ஆயிரக்கணக்காக வெளியேறும் மக்கள் மீண்டும், தங்கள் சொந்த ஊர் திரும்பவே விரும்புகிறார்கள்.
குல்பர்க்கா, ரெய்ச்சூர், பீதர், பெல்லாரி உள்ளிட்ட வடக்கு கர்நாடக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

அக்னி நட்சத்திரம்
வட கர்நாடக பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக, இப்போதே, 44 டிகிரி செல்சியசை ஒட்டியுள்ளது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது.

கட்டுப்படவில்லை
ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் அதிகபட்சமாக 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கும் ஏழை, எளிய வட கர்நாடக மக்களால், இந்த விலைக்கு குடிநீர் வாங்கி கட்டுப்பிடியாகவில்லை.

மும்பை, பெங்களூர் ஓட்டம்
இதையடுத்து ரயில்களில் பெங்களூர், மைசூர், மும்பை என ஊரை மாற்றிக்கொண்டு குடும்பத்தோடு வெளியேறி வருகிறார்கள். சொந்த ஊரில் நிலம், ஆடு, மாடுகள், சொந்த வீடுகள் என இருந்தபோதிலும், இவர்களால் தண்ணீர் தட்டுப்பாட்டை தாங்கிக்கொண்டு இருக்க முடியவில்லை.

கூலி வேலை
பல குடும்பங்கள் ஆடு, மாடுகளை விற்பனை செய்துவிட்டு, பிற நகரங்களை நோக்கி குடும்பத்தோடு செல்கிறார்கள். பெங்களூரிலுள்ள கட்டுமான நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து கட்டிட வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

தண்ணீர்
இதுகுறித்து, இடம் பெயர்ந்து வந்த சிலரிடம் கேட்டபோது, எங்களால் சொந்த ஊரை விட்டுவிட்டு இருக்க முடியாது. ஆனால், அங்கு இருந்தால், தண்ணீர் கிடைக்காமல் செத்துப்போவோம் என்ற பயத்தில் ஊரை விட்டு ஓடி வந்துள்ளோம். மழைக்காலம் தொடங்கிய பிறகுதான் சொந்த ஊர் பக்கம் போக முடியும்.

மழை பெய்தால்தான்
இந்த நிலைக்கு யாரையும் குற்றம்சாட்ட போவதில்லை. விதிதான் இவ்வாறு அடுத்தடுத்த இரு ஆண்டுகளாக மழை இன்றி எங்களை தவிக்க செய்துள்ளது. இவ்வாறு அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

நிரம்பி வழியும் ரயில்கள்
இதுபோன்ற இடப்பெயர்வு காரணமாக, வட கர்நாடகாவில் இருந்து தினமும் பெங்களூருக்கு வரும் ரயில்களில் முன்பதிவற்ற வகுப்புகளில் கூட்டம் பிதுங்கி வழிகிறது. மும்பை செல்லும் ரயில்களிலும் நிலைமை இப்படித்தான் உள்ளதாம்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications