டெல்லி வந்ததிலிருந்து ஹோட்டலிலேயே முடங்கியுள்ள மிஷல்.... சாப்பாடும் அங்கே தான்!
டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் டெல்லியில் உள்ள மவ்ரியா ஹோட்டல் அறையிலேயே மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்களை வரவேற்றார். இதையடுத்து பீஸ்ட் காரில் ஏறி ஒபாமாவும், மிஷலும் டெல்லியில் உள்ள ஐடிசி மவ்ரியா ஹோட்டலுக்கு சென்றனர்.
ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த ஒபாமா அங்கிருந்து கிளம்பி ராஷ்ட்ரபதி பவன் சென்றார். பின்னர் ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஹைதராபாத் ஹவுஸ் சென்ற ஒபாமாவுக்கு மோடி மதிய விருந்து அளித்துள்ளார். விருந்தின்போது அவர்கள் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் மிஷல் டெல்லி வந்ததில் இருந்து ஹோட்டல் அறையிலேயே உள்ளார். மதிய உணவு கூட அவரது அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியா வந்தபோது மிஷல் ஒபாமாவுடன் சேர்ந்து ராஜ்காட் சென்றார். இம்முறை அவர் செல்லவில்லை.
டெல்லி வந்ததில் இருந்தே ஹோட்டலில் முடங்கியுள்ளார் மிஷல். ஒபாமா, மிஷலின் வருகையையொட்டி ஹோட்டலில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.