100 கி.மீ. தூரம் நடை.. பலவீனமடைந்த கர்ப்பிணிக்கு பிரசவம்.. பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தை
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து பீகாரில் உள்ள சொந்த மாநிலத்திற்கு நடந்தே சென்று கொண்டிருந்த போது புலம்பெயர் தொழிலாளியின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிறந்த பெண் குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
லாக்டவுனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருகிறார்கள். ஒரு பக்கம், பசி, பட்டினியால் வாடுகிறார்கள், மறுபக்கம் நடந்தே சொந்த மாநிலம் செல்லும் போது விபத்துகளில் சிக்கி பலியாகிறார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜத்தின் ராம் மற்றும் பிந்தியா தம்பதி. இவர்கள் பணி நிமித்தமாக பீகாரிலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு பணியாற்றி வந்தனர்.

பணம் இல்லை
இந்த நிலையில் பிந்தியா கர்ப்பம் அடைந்தார். இதனிடையே லாக்டவுன் நடவடிக்கையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் பணமுமில்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகள் இயங்காததால் சைக்கிளிலும் நடந்தும் சிலர் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

வாடகை வாகனங்கள்
அது போல் ராம்- பிந்தியா தம்பதியும் கையில் பணமில்லாமல் லூதியானாவில் அவதிப்பட்டு வந்தனர். அம்பலாவுக்கும் யமுனாநகருக்கும் சிலர் வாடகை வாகனங்களை அமர்த்தியும் சிறப்பு ரயில்களிலும் பயணம் செய்து வருகிறார்கள். அது போல் சிறப்பு ரயில்களில் ஊர் செல்ல ராம்- பிந்தியா தம்பதி முன்பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அம்பலா நகர்
இதனால் 9 மாத கர்ப்பிணியை அழைத்து கொண்டு நடந்தே செல்ல முடிவு செய்த ராம், கடந்த வாரம் லூதியானாவிலிருந்து புறப்பட்டனர். இந்த நிலையில் 100 கி.மீ. தூரம் பயணம் செய்த அவர்கள் அம்பலா நகரை அடைந்தனர். அப்போது பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ராம்.

உடல்நிலை பலவீனம்
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது. லாக்டவுனால் வேலையிழந்த ராம் பணமில்லாததால் பிந்தியாவுக்கு சரியான சத்துள்ள உணவை அளிக்க முடியாமல் போனதும் 100 கி.மீ நடந்தே பயணித்ததால் பிந்தியாவின் உடல்நிலை பலவீனமடைந்ததும் தெரியவந்தது.

மோசம்
இதையடுத்து அம்பலாவிலேயே அந்த குழந்தைக்கு இறுதி சடங்கை மேற்கொண்டனர். அம்பலா கண்டோன்மென்ட்டில் தம்பதி தங்க தன்னார்வல நிறுவனம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு உணவு வழங்கியது. ஷிராமிக் ரயில் மூலம் பீகார் அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது. ராம் தம்பதிக்கு இதுதான் முதல் குழந்தையாம். அந்த குழந்தையை பற்றி எத்தனை கனவுகளை கண்டிருந்தனரோ தெரியவில்லை. ஆனால் நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மோசமாகி வருவது நன்றாகவே தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications