ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் .. பொது மக்கள் பீதி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் மிகவும் பீதிக்கு உள்ளானார்கள். இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிப்பகுதிகளில் தஞ்சமடைந்தனர். வீடுகள், கடைகள் உள்பட கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தின் தாக்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள குப்வாரா, கிஸ்த்வார், பதர்வா உட்பட பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications