ஐடி அதிகாரிகள் பிடியில் அமைச்சர் டி.கே.சிவகுமார்.. செல்போனும் பறிப்பு
பெங்களூர்: கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரை தங்கள் கட்டுப்பாட்டில் ஐடி அதிகாரிகள் வைத்துள்ளனர். அவரின் செல்போன்களையும் பறித்துக்கொண்டுள்ளனர்.
குஜராத் எம்.எல்.ஏக்களை தங்க வைத்து பராமரித்ததற்காக கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ளது வருமான வரித்துறை.
குஜராத் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் ரெசார்ட்டிலும் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அந்த ரிசார்ட்டில் சிவகுமாரிடம் விசாரணை நடத்திய ஐடி அதிகாரிகள், பிறகு அவரை பெங்களூர் சதாசிவநகரிலுள்ள அவரின் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாதக கூறப்படுகிறது.
Recommended Video
ஆனால் சிவகுமார் வீட்டில் லாக்கர் இருப்பதால் அதை திறக்க அவரே வர வேண்டும் என்று அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அவரின் செல்போனையும் பறித்து வைத்துள்ளனர். மற்றொருபுரம் டெல்லியிலுள்ள சிவகுமார் வீட்டிலும் ஐடி சோதனை நடந்து வருகிறது.