17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஷேர் ஆட்டோ டிரைவர், 2 பயணிகள்
ஹைதராபாத்: ஆந்திராவில் ஷேர் ஆட்டோவில் சென்ற 17 வயது சிறுமியை டிரைவர் மற்றும் 2 பயணிகள் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குட்லவல்லரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். ஆட்டோவில் அவருடன் 2 ஆண் பயணிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் டிரைவர் ஆட்டோவை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டி சென்றார். அங்கு வைத்து டிரைவர் மற்றும் 2 பயணிகள் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். உடனே அவர் இது பற்றி குடிவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே போலீசார் சிறுமியை பரிசோதனைக்காக குடிவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications