ம.பி.: 17 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 3 வாலிபர்கள்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 17 வயது தலித் சிறுமியை 3 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாகவும், பலாத்காரம் செய்யப்படும் பெண்கள், சிறுமிகள் பெரும்பாலும் தெரிந்தவர்கள், உறவினர்களால் தான் சீரழிக்கப்படுதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த செய்தியை அதை உறுதி செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் லசுதியாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.

பார்ட்டி
பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுமியை வழியில் பார்த்த அவருக்கு தெரிந்தவர்களான சுராஜ்(20), தீபேஷ்(21) மற்றும் ரித்தேஷ்(22) அவரை தங்களின் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றனர்.

பலாத்காரம்
பார்ட்டி என்று கூறி அழைத்துச் சென்ற அவர்கள் சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து தீபேஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீடியோ
தீபேஷ் சிறுமியை சீரழித்ததை சுராஜ் மற்றும் ரித்தேஷ் வீடியோ எடுத்துள்ளனர். ரூ.50 ஆயிரம் தரவில்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று ரித்தேஷ் சிறுமியின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார்.

புகார்
அவர்களின் மிரட்டலை தாங்க முடியாமல் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் அந்த 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications