மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு.. காரணம் இதுதான்!
ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரமில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். அங்கு தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மிசோரம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மிசோரம் தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள். மிசோரம் தேர்தலுக்காக மொத்தம் 1276 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் பணியில் சுமார் 6,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மிசோரம் தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 50 கம்பெனிகள் துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டனர்.
மிசோரமில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8,51,895 ஆகும். இவர்களில் ஆண்கள்- 4,38,925 (51.3%); பெண்கள்- 4,12,969 (48.7%). லாங் திலாய் மாவட்டம் துய்சிங் தொகுதியில் அதிகபட்சமாக 36,042 வாக்காளர்கள். மிக குறைந்தபட்சமாக லுங்லேய் மாவட்டம் தோரங் தொகுதியில் 14,909 பேர் வாக்காளர்கள் உள்ளனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 80.43 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதனிடையே, மிசோரமில் உள்ள ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முல்லுங்து என்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக சோதனைக்காக நடத்தப்படும் மாதிரி வாக்குப்பதிவு தரவுகளை அழிக்க வாக்குச்சாவடி ஊழியர்கள் மறந்து விட்டனர். இதனால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தற்போது வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் முல்லுங்து வாக்குச்சாவடி ஐஸ்வால் தெற்குIII தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதியில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிசோ தேசிய முன்னணி, மிசோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேட்சை ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications