மே.வங்க ஆளுநர் எம்.கே. நாராயணனையும் வீட்டுக்கு அனுப்புகிறது மோடி அரசு!
டெல்லி: மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே. நாராயணனையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. இதனால் அவரும் விரைவில் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கலாம் எனத் தெரிகிறது.
கேரளாவைச் சேர்ந்தவர் எம்.கே. நாராயணன். சென்னை லயோலா கல்லூரியில் படித்து முடித்தவர்.. இலங்கை பிரச்சனையில் இந்தியா தீவிரமாக ஒருதலைபட்சமாக தலையிட்ட ராஜிவ் காந்தி காலத்தில் உளவு அமைப்பான ஐ.பி. தலைவராக இருந்தவர்.

ஐ.பி தலைவர்.. ராஜிவ் கொலை
இவர் ஐ.பி. தலைவராக இருந்த காலத்தில்தான் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அதேபோல் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சிபிஐ விசாரணைக்கு தராமலேயே மறைத்தவர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டவரும் இவரே.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகரானார். பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்.

மும்பை தாக்குதல்
இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த காலத்தில்தான் அதாவது 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவமும் நடந்தது.

இலங்கையின் நண்பராக இந்தியா
அதேபோல் இலங்கை இறுதியுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசை செயல்படவைத்தவரும் எம்.கே. நாராயணன் என்று கூறப்படுவது உண்டு.

மே.வங்க ஆளுநராக..
அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி மேற்கு வங்க ஆளுநராகவும் அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். பொதுவாக காங்கிரஸ் நல விரும்பியாக, கேரளா லாபியிஸ்டாகவும் காலத்தை ஓட்டியவர் எம்.கே. நாராயணன்.

ராஜினாமா செய்கிறார்?
இப்போது எம்.கே. நாராயணனையும் மோடி அரசு பதவி விலக சொல்லியிருக்கிறது. இதனால் நிச்சயம் எம்.கே. நாராயணன் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யக் கூடும் என்றே தெரிகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications