பத்மாவதிக்கு எதிர்ப்பு... ஹரியாணாவில் பள்ளி குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின், ராகுல் கண்டனம்
பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது ஹரியாணாவில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம
Recommended Video
குர்கான் : பத்மாவசி படம் திரையிடப்படுவதை கண்டித்து ஹரியாணாவில் போராட்டத்தில் ஈடுபட்ட கார்னி சேனா அமைப்பினர் அவ்வழியாக வந்த பள்ளி குழந்தைகள் பயணம் செய்த பேருந்து மீது தாக்குதல் நடத்தியதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் ராணியை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வடமாநிலங்களான மத்தியப் பிரதேசம், ஹரியாணாஸ ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில அரசுகள் தெரிவித்துவிட்டன.
இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
அப்போது ஹரியாணா மாநிலம் குருகிராமில் பேருந்துக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. மேலும் கார்னி சேனா அமைப்பினர் பள்ளி மாணவர்கள் என்றும் பாராமல் ஜிடி கோயங்கா பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்துவதும், குழந்தைகள் அலறுவதும் காண்போரை கதி கலங்க செய்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் குண்டர்கள் பள்ளி வாகனத்தை தாக்குவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
It is extremely disturbing to see hooligans masquerading as protesters, attack school children. The deafening silence of Central and BJP ruled State Govts in the face of such lawlessness is detestable. I seek immediate intervention to protect public from these extremist elements.
— M.K.Stalin (@mkstalin) January 25, 2018
சட்டத்திற்கு புறம்பான இந்த செயலை மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசும் வாய்மூடி மௌனம் காக்கின்றன. இதுபோன்ற சமூக விரோத கும்பலிடம் இருந்து மக்களுக்கு பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
There will never be a cause big enough to justify violence against children. Violence and hatred are the weapons of the weak. The BJP's use of hatred and violence is setting our entire country on fire.
— Office of RG (@OfficeOfRG) January 24, 2018
இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தவே முடியாது. வன்முறையும் வெறிச் செயலும் கோழைகளின் ஆயுதங்கள். பாஜகவின் வன்முறையால் நாடே பற்றி எரிகிறது என்றார் ராகுல் காந்தி.