ஆந்திராவைப் பிரிக்காதீர்கள்... மத்திய அமைச்சர் காலில் விழுந்து கெஞ்சிய 20 எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என வலியுறுத்தி 20 எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்ததால் தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்தான வரைவு மசோதாவை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்தான் வரைவு மசோதாவை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

telangana21

அப்போதும், அங்கு வந்த தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காலில் விழுந்தனர். எம்.எல்.ஏ.க்கள் திடீரென காலில் விழுந்ததை பார்த்து அவர் திகைப்படைந்தார்.

காலில் விழுந்த எம்.எல்.ஏக்கள் ‘தயவு செய்து ஆந்திராவை காப்பாற்றுங்கள். தெலுங்கானாவை பிரிக்க வேண்டாம், தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்' என வேண்டுகோள் விடுத்தார்கள்.

தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாவலர்கள் ஜெய்ராம் ரமேஷை, எம்.எல்.ஏக்கள் மத்தியில் இருந்து மீட்டு பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.

எம்.எல்.ஏக்கள் காலில் விழுந்த அதிர்ச்சியில் இருந்து அங்கிருந்தவர்கள் மீள்வதற்குள், மத்திய அமைச்சர் நாராயணசாமி காருக்கு முன் ஒரு எம்.எல்.ஏ. தரையில் படுத்து உருண்டார். அப்போது சில எம்.எல்.ஏ.க்கள் அவரது காரின் மேல் இருந்த சிவப்பு விளக்கை சேதப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக ஆந்திர எம்.எல்.ஏ கேசவ் கூறும்போது, ‘ஆந்திர சட்டசபை ஒப்புதல் இல்லாமல் தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் வைப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+