மகாராஷ்டிராவில் வேலை..ஆனா மராத்தி தெரியாதா? ரயில்வே பெண் அதிகாரியை மிரட்டிய ராஜ்தாக்கரே அடிப்பொடிகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெறுவதற்காக மராத்தி மொழியில் விண்ணப்பித்ததை நிராகரித்த ரயில்வே பெண் அதிகாரியை ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மிரட்டியிருப்பது மும்பை ரயில்வே ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மத்திய ரயில்வே அலுவலகத்தில் அத்துறை தொடர்பான சில விவரங்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கோரி மராத்தி மொழியில் அதிகாரி ஸ்வாதி சின்ஹாவிடம் சிலர் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த விண்ணப்பத்தை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதித் தருமாறு ஸ்வாதி சின்ஹா கூறியிருக்கிறார்.

MNS workers harass female railway employee over RTI info

இதற்கு ஆட்சேபித்து ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் அந்த பெண் அதிகாரியை முற்றுகையிட்டு கெரோ செய்துள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் வேலை பார்ப்பதால் மராத்தி தெரியாது என்று சொல்லக் கூடாது; இங்கே வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் மராத்தியை தெரிந்திருக்க வேண்டும்; மராத்தி மக்களின் கலாசாரத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதில் அதிர்ந்து போன அந்த அதிகாரி கண்ணீர் சிந்த வேண்டிய நிலைதான் ஏற்பட்டது.

இந்த விவகாரம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் விண்ணப்பத்தை எழுதித் தாருங்கள் என்று கேட்டது எப்படி குற்றமாகும்? என அவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+