'டிவி ஷோ'வில் பங்கேற்க விளம்பரத்திற்காக மும்பை டிஐஜி மீது பலாத்கார புகார் கூறிய மாடல் அழகி

மும்பை டிஐஜி சுனில் பரஸ்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாடல் அழகி ஒருவர் கடந்த மாதம் 24ம் தேதி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சுனிலை சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் போலீசார் மாடல் அழகியின் முன்னாள் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திகீயிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். மேலும் அவர் தானும், மாடலும் பேசிய சிசிடிவி வீடியோவை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ரிஸ்வான் இது குறித்து கூறுகையில்,
அந்த மாடல் போலீஸ் அதிகாரியை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று தான் என்னிடம் கூறினார். அவருக்கும், பரஸ்காருக்கும் இடையே நெருக்கம் உள்ளது பற்றி அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விளம்பரம் தேட புகார் தெரிவிக்கப் போவதாக அவர் என்னிடம் கூறினார். ஆனால் அவர் என் பெயரை தவறாக பயன்படுத்துவது பற்றி அறிந்த பிறகு அந்த திட்டத்தில் இருந்து நான் பின்வாங்கினேன் என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வேலை விஷயமாக சுனில் பரஸ்காரை அணுகியபோது அவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த மாடல் அழகி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் டிஐஜி தன்னை மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்ததற்காகன ஆதாரங்களையும் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications