மேகதாது விவகாரம்... விரைவில் ஆவண செய்வதாக மோடி உறுதி ... தம்பித்துரை தகவல்
டெல்லி: மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் இணைந்து சென்று நேரில் பார்த்து மனு கொடுத்தனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட பிரதமர் விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்தார் என்று பின்னர் அதிமுக குழு தலைவர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக எம்.பியும், லோக்சபா துணைத் தலைவருமான தம்பித்துரை தலைமையில் இந்த எம்.பிக்கள் குழு பிரதமரை நேரில் சந்தித்தது. எம்.பிக்களில் 48 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். 4 பேர் திமுக, ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (டி.கே.ரங்கராஜன்), இன்னொருவர் பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆவர்.

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.பி. ராதாகிருஷ்ணனும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார்.
மேலும் தமிழரும், உ.பி.யைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பியுமான அம்பேத் ராஜனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சிபிஐ கட்சியின் டி.ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
சுமார் 25 நிமிடம் இந்தச சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை பிரதமரிடம் தமிழக குழு அளித்தது. தமிழக அரசு சார்பில் ஒரு மனுவும், திமுக சார்பில் ஒரு மனுவும் பிரதமரிடம் வழங்கப்பட்டன. பின்னர் தங்களது கோரிக்கையை விளக்கி ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒருவர் பேசினர்.
தம்பித்துரை, கனிமொழி, அன்புமணி ராமதாஸ், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பேசினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு மாநில முதல்வர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டது.
சந்திப்புக்குப் பின்னர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்குவது இல்லை என்றும், கோர்ட் தீர்ப்பை மதித்து நடப்பது இல்லை என்றும் பிரதமரிடம் கூறினோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். நாங்கள் கூறிய விவரங்களை கேட்டு அறிந்த பிரதமர் மோடி, விரைவில் ஆவன செய்வதாக உறுதி அளித்தார் என்றார் அவர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications