மோடி பிரதமராக முடியாது, வேண்டுமானால் டீ விற்கலாம், கடை போட்டுத் தர்றோம்- அய்யர்
டெல்லி: குஜாரத் முதல்வரும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியால் பிரதமர் ஆக முடியாது, நாங்கள் வேண்டுமானால் அவருக்கு டீக்கடை வைத்துத் தருகிறோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட மணி சங்கர் அய்யர் மோடி குறித்துப் பேசுகையில், ‘நம் நாட்டிற்கு மோடியால் ஒருபோதும் பிரதமராக முடியாது. ஒருவேளை அவர் விரும்பினால் அவருக்கு நாங்கள் வேண்டுமானால் ஒரு டீக்கடை அமைத்து தருகிறோம். காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நரேஷ் அகர்வால், டீக்கடை உரிமையாளர் நாட்டின் பிரதமர் ஆக முடியாது எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது அதே போல், காங்கிரஸும் மோடியை டீக்கடைக் காரர் என விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணி சங்கர் அய்யரின் மோடி குறித்தான இந்த கருத்து குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் கூறுகையில், ‘மணி சங்கர் அய்யரால் இப்படி பேசுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும் எனத் தெரிவித்துள்ளார்.