பிபேக் தேப்ராய் தலைமையில் குழு.. பொருளாதார சரிவை மீட்க மோடியின் புதிய அறிவிப்பு!
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராய் தலைமையில் 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு இந்த குழு வழங்கும். இந்த குழுவில் பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய் இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மெண்ட் ரிசர்ச் பேராசிரியர் அஷிமா கோயல் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications