மீள் குடியேற்றம்.. மோடி அரசின் முடிவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் வரவேற்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகள் மீண்டும் குடியேற்றப்படுவர் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனைத்து இந்திய காஷ்மீரி சமாஜ் இயக்கத்தின் பொதுச்செயலர் ரமேஷ் ரெய்னா, பண்டிட்டுகள் தங்களது சொந்த மண்ணில் குடியேறுவதற்கான உரிமை உள்ளது. அவர்களும் ஜனநாயக அரசியலில் இணைவதற்கும் உரிமை இருக்கிறது.
தற்போது மத்திய அரசு எங்களை மீண்டும் குடியேற்றப் போவதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் எங்களது மீள் குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுக்கான திட்டங்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications