மாயம் நிகழ்த்திய டிஜிட்டல் இந்தியா திட்டம்.. என்னென்ன வசதிகள் பாருங்கள்!
மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது.
டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. நேரடியாக பணம் கொடுப்பது குறைந்து டிஜிட்டல் வர்த்தகம் அதிகம் ஆகி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டமும், ஸ்டார்அப் இந்தியா திட்டமும், பணமதிப்பிழப்பு நீக்கமும் இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகத்தை அதிகமாக்கிவிட்டது. முக்கியமாக கேஷ்லெஸ் வர்த்தகமானது, இதன் மூலம் எளிதாக சாத்தியமாகி உள்ளது.

இணையம் வழியாக பணம் பரிமாறப்படுவது பண பரிமாற்றத்தை மட்டும் எளிதாக்கவில்லை, அரசால் பணம் எங்கே செல்கிறது என்பதையும் எளிதாக கண்காணிக்க முடிகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு பெரிய அளவில் தடுக்கபடுகிறது. இந்த டிஜிட்டல் வர்த்தகம் காரணமாக நிறைய புதிய மக்கள் வருமான வரி கட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அரசின் வரி வருவாய் அதிகம் ஆகியுள்ளது.
அதேபோல் இதனால் மக்கள் கட்டுக்கட்டாக பணத்தை சுமந்து செல்லும் நிலையும் இப்போது இல்லை. அதேபோல் ஏடிஎம்களில் வரிசையில் நிற்கவேண்டிய நிலையும் மாறிவிட்டது. இதன் மூலம் பண பரிவர்த்தனை மிகவும் எளிதாகி இருக்கிறது.

2011ல் டிஜிட்டல் வர்த்தகத்தில் உலகளவில் இந்தியா 36வது இடத்தில் இருந்தது. 2018ல் இது 28வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இது ஒரு அசாதாரண வளர்ச்சி ஆகும். மக்களுக்கும் மக்களுக்கும், அரசுக்கும் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பண பரிவர்த்தனை இணையம் வழியே மிக அதிகம் ஆகியுள்ளது.
இதன் மூலம் மொபைலில் பண பரிமாற்றம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் மொத்தமாக குறைந்து இருக்கிறது. இதனால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்து இருக்கிறார்கள். எளிதாக இவர்கள் மொபைல் மூலமே பணம் அனுப்ப முடிகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் இணையம் பயன்பாடு ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் ஜிபியாக உயர்ந்து இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை அளித்துள்ளது. இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தியாவிலோ பிரபலப்படுத்த அரசு பெரிய அளவில் முயற்சி செய்தது. அதில் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளது.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications