மாயம் நிகழ்த்திய டிஜிட்டல் இந்தியா திட்டம்.. என்னென்ன வசதிகள் பாருங்கள்!
மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது.
டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. நேரடியாக பணம் கொடுப்பது குறைந்து டிஜிட்டல் வர்த்தகம் அதிகம் ஆகி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டமும், ஸ்டார்அப் இந்தியா திட்டமும், பணமதிப்பிழப்பு நீக்கமும் இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகத்தை அதிகமாக்கிவிட்டது. முக்கியமாக கேஷ்லெஸ் வர்த்தகமானது, இதன் மூலம் எளிதாக சாத்தியமாகி உள்ளது.

இணையம் வழியாக பணம் பரிமாறப்படுவது பண பரிமாற்றத்தை மட்டும் எளிதாக்கவில்லை, அரசால் பணம் எங்கே செல்கிறது என்பதையும் எளிதாக கண்காணிக்க முடிகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு பெரிய அளவில் தடுக்கபடுகிறது. இந்த டிஜிட்டல் வர்த்தகம் காரணமாக நிறைய புதிய மக்கள் வருமான வரி கட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அரசின் வரி வருவாய் அதிகம் ஆகியுள்ளது.
அதேபோல் இதனால் மக்கள் கட்டுக்கட்டாக பணத்தை சுமந்து செல்லும் நிலையும் இப்போது இல்லை. அதேபோல் ஏடிஎம்களில் வரிசையில் நிற்கவேண்டிய நிலையும் மாறிவிட்டது. இதன் மூலம் பண பரிவர்த்தனை மிகவும் எளிதாகி இருக்கிறது.

2011ல் டிஜிட்டல் வர்த்தகத்தில் உலகளவில் இந்தியா 36வது இடத்தில் இருந்தது. 2018ல் இது 28வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இது ஒரு அசாதாரண வளர்ச்சி ஆகும். மக்களுக்கும் மக்களுக்கும், அரசுக்கும் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பண பரிவர்த்தனை இணையம் வழியே மிக அதிகம் ஆகியுள்ளது.
இதன் மூலம் மொபைலில் பண பரிமாற்றம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் மொத்தமாக குறைந்து இருக்கிறது. இதனால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்து இருக்கிறார்கள். எளிதாக இவர்கள் மொபைல் மூலமே பணம் அனுப்ப முடிகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் இணையம் பயன்பாடு ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் ஜிபியாக உயர்ந்து இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை அளித்துள்ளது. இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தியாவிலோ பிரபலப்படுத்த அரசு பெரிய அளவில் முயற்சி செய்தது. அதில் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications