இந்த பட்ஜெட்டில் எல்லாமே உள்ளது- பிரதமர் மோடி
டெல்லி: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் எல்லாமே உள்ளது, முற்போக்கு பார்வை கொண்ட பட்ஜெட் இது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "2015 ரயில்வே பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது. எதிர்காலத்தையும், பயணிகளையும் மையமாகக் கொண்டது. சாதிப்பதற்கான தெளிவான கண்ணோட்டத்தையும், உறுதியான திட்டத்தையும் கொண்டது.

இந்திய ரயில்வேயில் தொழில் நுட்ப மேம்பாடு, நவீனமயம் ஆகியவற்றுக்கு முதல் முறையாக தெளிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ள பட்ஜெட் இது என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட், இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக ரயில்வேயை ஆக்குவதற்கான தெளிவான வரைவுத் திட்டங்களை கொண்டிருக்கிறது. இது நாட்டின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றும்.
ரயில்வே பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேகம், அளவுகோல், சேவை, பாதுகாப்பு என எல்லாமும் உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications