அது ஏன் நிதிஷ்ஜிக்கு கரெக்டா '3 இடியட்ஸ்' நினைவுக்கு வந்தது?: மோடி கிண்டல்
பாட்னா: காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியை 3 இடியட்ஸுடன் ஒப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இது குறித்து மோடி கூறுகையில்,

லாலுஜி பொழுதுபோக்காக பேசி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து பீகார் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாப்பது, உண்மையை மறைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் லாலுஜி மற்றும் நிதிஷ்ஜிக்கு இடையே பிரச்சனை உள்ளது.
நிதிஷ்ஜி நேற்று கவிதை வாசித்தார். கவிதை வாசித்து லாலுவை தோற்கடிக்கலாம் என்று அவர் நினைக்கிறார். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாளம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
நிதிஷ் தனது கவிதைக்கு எதற்காக 3 இடியட்ஸ் படத்தில் வரும் பாடலை தேர்வு செய்தார் என தெரியவில்லை. அவருக்கு ஏன் 3 இடியட்ஸ் நினைப்பு வந்தது. என்ன ஒரு பொழுதுபோக்கு நிதிஷ் பாபு. உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் உள்ளது. அந்த ஒரு வாரமும் இதையே செய்யுங்கள். உங்களின் ஆட்களை அழைத்து கவியரங்கம் நடத்துங்கள்.
நன்றாக பயிற்சி எடுங்கள் நவம்பர் 8ம் தேதிக்கு(வாக்கு எண்ணிக்கை) பிறகு உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது நீங்கள் ஏன் சிலரை விட்டு விலகி சிலருடன் சேர்ந்தீர்கள் என உங்கள் சோகத்தை, கண்ணீர் கதையை நிதானமாக பாட்டு பாடுங்கள்.
இது குறித்து கவிதை எழுதிக் கொண்டே இருங்கள், கண்ணீர் விட்டுக் கொண்டே இருங்கள் என்றார்.
நிதிஷ் குமார் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை கிண்டல் செய்து 3 இடியட்ஸ் படத்தில் வரும் பாடல் வரிகளை மாற்றி பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications