மறைந்த என் தந்தையை மோடி அவமதித்துவிட்டார்: பிரியங்கா குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி கொல்லப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தியை அவமதித்துவிட்டதாக பிரியங்கா காந்தி வாத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடைசி நேரத்தில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ரா பிரச்சாரம் செய்ய வந்துள்ளார்.

அவரது நறுக், சுறுக் பிரச்சாரம் மீடியா மற்றும் மக்களை கவர்ந்துள்ளது.

பிரியங்கா

பிரியங்கா

மோடி கொல்லப்பட்ட எனது தந்தையை அமேதி மண்ணில் அவமதித்துவிட்டார். அவரின் இந்த செயலை அமேதி மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அரசியல்

அரசியல்

பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார். அவருக்கு அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் பதில் கிடைக்கும் என்று பிரியங்கா கூறினார்.

பதிலடி

பதிலடி

மோடி ஏதாவது பேசுவதும் அதற்கு பிரியங்கா காந்தி நச்சென்று பதிலடி கொடுப்பதும் இது ஒன்றும் முதல் முறை அன்று.

ராஜீவ் மகள்

ராஜீவ் மகள்

மோடி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் பிரியங்கா தனது மகள் போன்று என்று தெரிவித்தார் என செய்திகள் வெளியாகின. இதை கேட்ட பிரியங்கா, நான் ராஜீவ் காந்தியின் மகள் என்று மோடிக்கு பதில் அளித்தார்.

அகந்தை

அகந்தை

அமேதியில் பேசிய மோடி, அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஸ்மிருதி இரானியை யார் என்று கேட்ட பிரியங்கா அகந்தை பிடித்தவர் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+