நேரு நினைவு அறக்கட்டளை பொறுப்பிலிருந்து சோனியா விலகல்... புதிய தலைவராகிறார் மோடி
டெல்லி: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நேற்று பதவி விலகினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
நேரு-காந்தி குடும்பத்தின் பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம். இது பிரதமர் தலைமையிலான மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓர் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட 17 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங், நிர்வாகக் கவுன்சில் தலைவராக டாக்டர் கரண் சிங் ஆகியோர் உள்ளனர். வரலாற்று அறிஞர் பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன், டாக்டர் என். பாலகிருஷ்ணன் ஆகியோரும் அருங்காட்சியக குழுவில் உள்ளனர்.
ஏற்கனவே, பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் நினைவுக்கான தேசிய கமிட்டியிலிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று தனது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுலகம் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்தும் சோனியா காந்தி விலகியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு சாதகமாக அமையாத நிலையில் சோனியாவின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே வரும் திங்கட்கிழமை நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நேரு நினைவு சமூகத்தின் அடுத்த தலைவராகிறார் மோடி.
சோனியா காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது பற்றி கருத்துக் கூற அதன் இயக்குநர் மகேஷ் ரங்கராஜன் மறுத்துவிட்டார்.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications