நேரு நினைவு அறக்கட்டளை பொறுப்பிலிருந்து சோனியா விலகல்... புதிய தலைவராகிறார் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நேற்று பதவி விலகினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.

நேரு-காந்தி குடும்பத்தின் பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம். இது பிரதமர் தலைமையிலான மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓர் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

Modi its new head, Sonia resigns from Nehru Memorial Society

இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட 17 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங், நிர்வாகக் கவுன்சில் தலைவராக டாக்டர் கரண் சிங் ஆகியோர் உள்ளனர். வரலாற்று அறிஞர் பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன், டாக்டர் என். பாலகிருஷ்ணன் ஆகியோரும் அருங்காட்சியக குழுவில் உள்ளனர்.

ஏற்கனவே, பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் நினைவுக்கான தேசிய கமிட்டியிலிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று தனது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுலகம் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்தும் சோனியா காந்தி விலகியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு சாதகமாக அமையாத நிலையில் சோனியாவின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே வரும் திங்கட்கிழமை நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நேரு நினைவு சமூகத்தின் அடுத்த தலைவராகிறார் மோடி.

சோனியா காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது பற்றி கருத்துக் கூற அதன் இயக்குநர் மகேஷ் ரங்கராஜன் மறுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+