பாட்னாவில் சூ, சூவென விற்றுத் தீரும் மோடி ராக்கிகள்: குஷியில் வியாபாரிகள்
பாட்னா: சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் உருவம்பதித்த ராக்கிகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.
ரக்ஷாபந்தன் பண்டிகை இந்த வார இறுதியில் கொண்டாடப்படுகின்றது. பண்டிகை தினத்தன்று பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைக்கும் ஆண்களின் கையில் ராக்கியை கட்டுவார்கள். பதிலுக்கு சகோதரர்கள் அவர்களுக்கு அன்பளிப்பு அளிப்பார்கள்.

ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி ராக்கி விற்பனை சூடுபிடித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பதித்த ராக்கிகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அந்த ராக்கிக்கு மோடி ராக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோடி ராக்கி கடைக்கு வந்த வேகத்தில் விற்றுவிடுகிறது. கிராக்கி அதிகம் இருப்பதால் பிற வகை ராக்கிகளை விட மோடி ராக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து ராக்கியை மொத்த விற்பனை செய்யும் பிரமோத் குமார் கூறுகையில்,
பெரியவர்களை மோடி ராக்கி கவர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு சோட்டா பீம், ஆங்ரி பேர்ட்ஸ் உள்ளிட்ட ராக்கிகள் பிடித்துள்ளது. பாட்னா மார்க்கெட்டில் முதல்முறையாக மோடி ராக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. மோடி ராக்கிகள் கொல்கத்தாவில் இருந்து வருகிறது. வந்த வேகத்தில் விற்றுவிடுகிறது என்றார்.
மோடி ராக்கிகள் கடைக்கு வந்த வேகத்தில் விற்றுத்தீர்கிறது. குறைந்த நேரத்தில் இவ்வளவு ராக்கிகளை விற்பேன் என்று நான் நினைக்கவே இல்லை என்று வியாபாரி கோல்டி குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications