அமீரக சுற்றுப்பயணம் வெற்றி: மோடி ஹேப்பி அண்ணாச்சி
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அபுதாபியை அடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அபுதாபியில் பட்டத்து இளவரசர், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களை இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினார். இந்தியாவில் ரூ.. 5 லட்சம் கோடி முதலீடு செய்ய அமீரகம் முடிவு செய்துள்ளது.
அபுாதபியில் உள்ள பிரபல ஷேக் ஜயீத் மசூதிக்கு மோடி சென்றார். அதன் பிறகு துபாய் சென்ற மோடி அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். மோடிக்கு இந்தியர்கள் உற்தாக வரவேற்பு அளித்து அசத்தினார்கள்.
கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் சென்றுள்ள முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. தனது பயணத்தை முடித்துக் கொண்டு மோடி நேற்று இரவு துபாயில் இருந்து கிளம்பினார். இன்று அதிகாலை அவர் டெல்லியை அடைந்தார்.
மோடியின் அமீரக பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.