இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
டெல் அவில்: 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றடைந்தார். அங்கு மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அதன் நினைவாக மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் டெல் அவிவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மோடியை நேரில் வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப் ஆண்டவருக்கு பின்னர் பெஞ்சமின் நேதன்யாஹுவால் நேரில் சென்று மோடியை வரவேற்றது கவனிக்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இஸ்ரேலுடன், விவசாயம் மற்றும் தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் என தெரிகிறது. இதுதவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது இஸ்ரேல் அதிபர் ரிவ்லினையும் மோடி சந்தித்து பேசுகிறார். ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications