என்னை முடிக்க... ஆட்சியை சீர்குலைக்க தினமும் சதி.... மோடி பகீர் குற்றச்சாட்டு
புவனேஸ்வர்: தம்முடைய தலைமையிலான மத்திய அரசை சீர்குலைக்க வேண்டும் என என்.ஜி.ஓக்களும் எதிர்க்கட்சியினரும் நாள்தோறும் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒடிஷாவின் பர்காரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சிலர் காலை முதல் மாலை வரை என்னுடைய அரசை விமர்சிப்பதை மட்டுமே ஒரே வேலையாக வைத்திருக்கிறார்கள். டீ விற்பனை செய்தவர் எப்படி பிரதமராகலாம்? என ஜீரணிக்க முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு (என்.ஜி.ஓக்கள்) பணம் வருகிறது. எனது தலைமையிலான அரசு அதற்கு கணக்கு கேட்கிறது. தொண்டு நிறுவனங்கள் பெற்ற நிதிக்கு கணக்கு சொல்லுங்கள் என்றால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை தாக்குகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு கணக்கு கேட்பது தவறா? அப்படி கேட்க தொடங்கியதில் இருந்து மோடியை எப்படி முடிக்கலாம், மோடியின் அரசை எப்படி கவிழ்க்கலாம்? எனது தலைமையிலான அரசை எப்படி சீர்குலைக்கலாம் என்று எப்போதும் சதி செய்கின்றனர்.
ஊழல் எனும் பிணியில் இருந்து நாட்டை விடுவிக்கவே என்னை நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுத்தீர்கள். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு எதிராக என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு போகட்டும். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பில் இருந்து நான் விலகிச் செல்லப்போவதில்லை. நான் அந்த பணியில் இருந்து ஓய்ந்துவிடமாட்டேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications