குறிப்பு ஏதும் இல்லாமல், ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றி அசத்திய மோடி
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்ட நரேந்திரமோடி இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட பிறகு நடந்த நிகழ்ச்சியில், ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தினார்.
வழக்கமாக இந்தியில் சரளமாக உரையாற்றும் நரேந்திரமோடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விஞ்ஞானிகள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசினார். அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் கையில் குறிப்பு எதையும் வைத்துக்கொள்ளாமலேயே ஆங்கிலத்தில் சுமார் 20 நிமிடங்கள் சரளமாக உரையாற்றி அசத்தினார். இடையிடையே சில வார்த்தைகளை மட்டும் இந்தியில் பேசினார்.

மத்திய ஆட்சியில், இந்தியை புகுத்தாதீர்கள், என்று தமிழகத்தில் இருந்து உரக்க எழுந்த குரல்கள்தான், மோடியை ஆங்கிலத்தை கையிலெடுக்க செய்து விட்டது என்று ஸ்ரீஹரிகோட்டாவில் கூடியிருந்த தமிழ் பத்திரிகையாளர்கள் கிசுகிசுத்துக்கொண்டனர்.
ஆனால், இதையும் தாண்டி, உலக நாடுகளுக்கு மோடியின் உரை உள்ளபடியே சென்றடைய வேண்டும் என்பதும் மோடியின் திடீர் ஆங்கில உரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஐந்து நாடுகளில் செயற்கைக்கோள்களை தாங்கி பி.எஸ்.எல்.வி-சி23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. எனவே, உலக நாடுகளின் தலைவர்கள், மற்றும் விஞ்ஞானிகள், இந்த நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதால் மோடி ஆங்கிலத்தில் பேசியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications