மோடி பேச்செல்லாம் சரிதான், ஆனால் சங் பரிவாரங்களை அடக்கி வைக்க வேண்டும்- சிபிஐ
டெல்லி: இந்திய முஸ்லீம்கள் இந்த நாட்டுக்காகவே வாழ்பவர்கள், இந்த நாட்டுக்காக சாகவும் துணியக் கூடியவர்கள் என்று மோடி கூறியுள்ளது, முதல் முறையாக அவர் இந்த நாட்டின் பிரதமராக பேசியதாக கருதுகிறோம். ஆனால் இது போதாது. மாறாக, சங் பரிவார் அமைப்புகளை அவர் தட்டி வைக்க வேண்டும். மதக் கலவரங்களைத் தூண்ட முயற்சிக்கும் அவர்களிடம் அவர் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு பிரதமர் போல பேசியுள்ளார் மோடி. இது பாராட்டுக்குரியது, நல்ல விஷயமும் கூட. ஆனால் அவரது வார்த்தைகளை அவர் செயல்படுத்த வேண்டும்.

சங் பரிவார் அமைப்புகளை அவர் தட்டி வைக்க வேண்டும். மத ரீதியாக மக்களைப் பிரிக்கும் அவர்களை அவர் கண்டிக்க வேண்டும். லவ்ஜிஹாத் என்ற பெயரில் நாட்டில் பதட்டத்தை உருவாக்க நினைக்கும் அவர்களை அவர் கண்டிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் தற்போது ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் இதை பிரசாரம் போல செய்து வருகின்றன. இதை பிரதமர் தட்டிக் கேட்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்.
பாஜக தலைவர் அமீத் ஷா கூட பதட்டத்தை உருவாக்கும் வகையிலான கருத்துக்களைக் கூறியுள்ளார். இது தவறானதாகும்.
அமெரிக்காவுக்கு பிரதமர் செல்லும்போது அங்கு மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் அமெரிக்காவை கையாள வேண்டும். அமெரிக்காவின் சதி வலையில் இந்தியா வீழ்ந்து விடக் கூடாது.
கடந்த பல வருடமாக செயல்படாமல் உள்ள பழைய அணு சக்தி உலைகளை நம்மிடம் தள்ளப் பார்க்கிறது அமெரிக்கா. இதில் நாம் உஷாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நாம் அமெரிக்காவிடம் ஏமாந்தது போதும் என்றார் அவர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications