5 மீனவர் தூக்கு விவகாரம்... ராஜபக்சேவுடன் பேசுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை ரத்து செய்ய, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பிரதமர் மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 5 போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தூக்கில் போட கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த 5 பேரை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.
தூதரக மட்ட பேச்சு
இதற்கிடையே தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சு நடத்தி வருகிறது. மேலும் கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யும் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
விரைவில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடிப் பேச்சு நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. இந்த மாத இறுதியில் 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நேபாள தலைநகர் காட்மண்டுவில் சார்க் நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் போது மோடி-ராஜபக்சே சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அப்போது ராஜபக்சேயிடம் தமிழக மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்துவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 1976 - ம் ஆண்டுக்கு பிறகு யாரும் தூக்கில் போடப்படவில்லை. தூக்கு தண்டனையை நிறைவேற்ற எந்த ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஆனால் ராஜபக்சே மட்டும்தான் தூக்கு தண்டனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications