மோடி அலையை விட்டுவிடுங்கள்.. ஆளும் கட்சிக்கு எதிராக மட்டும் பிரசாரம் செய்யுங்க: இது அமித்ஷா கட்டளை!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மோடி அலையை மட்டுமே நம்பாமல் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று பாஜகவினருக்கு அக்கட்சித் தலைவர் அமித்ஷா கட்டளையிட்டுள்ளார்..
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. இருப்பினும் தொகுதிப் பங்கீட்டில் இருகட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மும்பை வந்த பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது லோக்சபா தேர்தலில் மோடி அலையால்தான் மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் 23ல் வெற்றி பெற்றோம். தற்போது மோடி அலையை மட்டும் களத்தில் நம்பாமல், 15 ஆண்டுகாலமாக ஆண்டு வரும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்விகளைப் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் அமித்ஷா.
இதனிடையே மகாரஷ்டிரா மாநில பாஜகவின் தேர்தல் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூரை அமித்ஷா நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications